திண்டுக்கல் அருகே அதிகாரிகளுக்கு வழங்க ரூ.10 டாஸ்மாக் ஊழியர் - வைரல் வீடியோ!திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மடூர் புகையிலைப்பட்டி அரசு டாஸ்மாக் மதுக் கடையில் கூடுதலாக ரூ.10 அதிகாரிகளுக்கு வழங்க வசூலிப்பதாக பணியாளர் பேசிய வீடியோ வைரலாகிறது.மடூர் புகையிலைப்பட்டி பகுதியிலுள்ள அரசு டாஸ்மாக் கடையில் நேற்று மது வாங்க சென்ற குடிமகன் ஒருவரிடம் விற்பனையாளர் ரூ. 130 க்கு பதிலாக ரூ.140 கேட்டார்.ரூ.10 அதிகமாக வாங்குகிறீர்களே ஏன் என குடிமகன் கேள்வி எழுப்ப விற்பனையா ளரோ,"குறிப்பிட்ட அதிகாரிகளின் பதவிகளை கூறி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறோம். அத னால் தான் அதிகம் வாங்குகிறோம். அனைத்து அதிகாரிகளுமே வாங்குகின்றனர்," என்பது போல பேசிய வீடியோ வைரலாகி வருகிறது