தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது!
1060 views
Subscribe தமிழ்நாடு videosதமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது அதில் மாநில அளவில் சிவகங்கை தேர்ச்சி சதவீதத்தில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது அரசு பள்ளி தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது சிவகங்கை மாவட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் தேர்வு எழுதியவர்கள்-17732 அதில்மாணவர்கள்- 8702மாணவிகள்- 9030 இத்தேர்வில்தேர்ச்சி பெற்றோர் 17294மாணவர்கள்-8390 (96.41%)மாணவிகள்- 8904 (98.60%)தேர்ச்சி(97.53.%)அரசுப்பள்ளிகளில் மாநில அளவில் 96.38சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்து சாதணை படைத்துள்ளதுஅரசு பள்ளிதேர்வு எழுதியவர் கள் மொத்தம்: '7598 96.38%மாணவர்கள்: 3493மாணவிகள்: 4105 தேர்ச்சி பெற்றோர் மாணவர்கள்: 3311மாணவிகள்: 4012மொத்தம்: 7323சதவீதம்: 96.38இது மாநில அளவில் முதலிடம் ஆகும் என்ற தகவல் முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்சிவகங்கை மாவட்டமானது மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சி ஆகும் இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின்ஒத்துழைப்பு கடுமையான முயற்சி என்றார் ஒவ்வொரு மாதமும் அரசு பள்ளிகளுக்கு மாதம் தோறும் ஒவ்வொரு தேர்வுக்கு மெட்டீரியல் வழங்கப்பட்டது மதிப்பெண் குறைந்த பள்ளிகளை கணக்கிட்டு எவ்வாறு முன்னேற்ற வேண்டும் என்று ஆலோசனை செய்து அதற்கான ஸ்டடி மெட்டீரியலும் வழங்கப்பட்டது அரசு பள்ளி அரசு உதவி பெறும். தனியார் பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர்களை கொண்டு 100 சதவீதம் வெற்றி பெற வைப்பது எப்படி என்று பயிற்சியும் வழங்கப்பட்டது ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தது 5 மாணவர்களையாவது 100 சதவீதம் மதிப்பெண் எடுக்க முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டது மாவட்டம் முழுவதும் கூகுள் மீட் மூலமாக ஆசிரியர்களோடும் மாணவர்களும் தொடர்பிலிருந்து மதிப்பெண்களை அதிகளவு எடுக்க வைப்பதும் குறைந்த மதிப்பில் உள்ள மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டோம் என்றார் பெரம்பலூரை விட 0 .14 சதவீதம் மட்டும் தான் வித்தியாசம் உள்ளது வரும் காலங்களில் முதலிடம் பெற முயற்சிப்போம் என்றார் இதற்கெல்லாம் கூட்டு முயற்சி தான் காரணம் சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 100க்கு 100% 138 பள்ளிகளில் 68 பள்ளிகள் 100% வெற்றி பெற்றுள்ளார்கள் ஏற்கனவே தமிழக அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் 1917- 18 ல் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளோம் என்பதையும் குறிப்பிட்டு தெரிவித்தார்