போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் லெமன் ஜூஸ் வழங்கிய கண்காணிப்பாளர்
1064 views
Subscribe தமிழ்நாடு videosதிருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது இந்நிலையில் குறிப்பாக கடந்த இரண்டு தினமாக 102 டிகிரி செல்சியஸ் வெயிலின் தாக்கம் இருப்பதால் திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது இந்நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்து வருகிறது.காவல்துறையினர் முன்கல பணியாளர்களாக பகல் இரவு பாராமல் கடும் வெயில் மற்றும் மழையிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.கோடை வெயிலில் இருந்து போக்குவரத்து காவல் துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மரு. கார்த்திகேயன் நேற்று காந்தி சிலை அருகே 52 போக்குவரத்து காவல்துறையினர்களுக்கு நீர்மோர் லெமன் ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினார் தினமும் காலை இரு வேளை மாலை இரு வேலை என்று போக்குவரத்து காவல்துறையினர்களுக்கு நீர்மோர் லெமன் ஜூஸ் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் மரு.கார்த்திகேயன் தெரிவித்தார் இந்நிகழ்வில் திருவண்ணாமலை நகர துணை கண்காணிப்பாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்