ஸ்ரீ நல்ல மாணிக்கர் சாமிகள் கோயில் சித்திரை விழா!
1130 views
Subscribe தமிழ்நாடு videosதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா குன்னலூர் அருகே கற்பகநாதர் குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ நல்ல மாணிக்கர் சாமிகள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.இக்கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு ஸ்ரீ நல்லமாணிக்கர் சாமிகள் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கியது.தொடர்ந்து ஏப்ரல் 30ஆம் தேதி குன்னலூர் வசந்த மண்டபத்திலிருந்து திருவுருவ மூர்த்திகள் புஷ்ப விமானத்தில் எழுந்தருளி வீதி உலா காட்சி வழங்கும் வைபவம் நடைபெற்றது. நேற்றைய தினம் ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு காவடி அபிஷேகமும், ஸ்ரீ நல்ல மாணிக்கர் சுவாமிகளுக்கு வருடோற்சவமும் நடைபெற்றது.சித்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு நேர்த்திக்கடன் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை 3 மணி முதல் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், 500க்கும் மேற்பட்ட கிடாக்களை கோயிலுக்கு கொண்டு வந்திருந்தனர். பூஜைகளுக்கு பிறகு ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடனை பக்தர்கள் பூர்த்தி செய்தனர்.தொடர்ந்து வெட்டிய கிடாவை கோயிலில் சமைக்கக் கூடாது என்பதால், பக்தர்கள் வெட்டிய கிடாவை அவரவர் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். கிடாவெட்டை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.