சிவகங்கை அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்களையும் பெற்றோர்களையும் தரையில் அமர வைத்த கல்லூரி நிர்வாகம்!
1018 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் உள்ள 12 துறைகளுக்கு 5219 விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் 908 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கை நடத்தப்படவுள்ளது. இதில் முதல் கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கலை, அறிவியல் பிரிவில் 200 மாணவர்கள் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் 12 என்ற விகிதத்தில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 1:3 என்ற விகிதத்தில் மாணவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடக்கவுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 13 முதல் 16ம் தேதி வரை நடக்கவுள்ளது. பெரும்பான்மை மாணவர்கள் அறிவியல் பிரிவில் கம்ப்யூட்டர் பட்டப்படிப்பினை அதிகம் தேர்வு செய்கின்றனர் கலைப்பிரிவில் அதிக மாணவர்கள் வரலாற்று பட்டப்படிப்பினை தேர்வு செய்கின்றனர். கடந்த ஆண்டு அரசு கல்லூரியில் அதிக மாணவர்கள் சேர்க்கும் விதமாக 20 சதவீத இடங்கள் அதிகரித்து சோக்கை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு கட் ஆப் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படும் போது குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எளிதில் சேர்க்கையில் பங்கேற்றனர் இந்த ஆண்டு அந்த குறை களையப்பட்டு அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்பட்டதுஅங்கு சேர்க்கைக்கு வந்த மாணவர்களுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இருக்கை தராமல் கல்லூரி நிர்வாகம் வெளியில் தரையில் உட்கார வைத்த சம்பவம் பெற்றோர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது