ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு சிவகங்கை எம்பி நன்றி தெரிவித்துள்ளார்!
1021 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது, சிவகங்கை எம்.பி கார்த்தி மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் 52 பயனாளிகளுக்கு ரூபாய் 36 லட்சம் செலவில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் பேசிய சிவகங்கை எம்.பி.,கார்த்தி இன்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு எவ்வித தடையும் இல்லை என்ற நல்ல உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு போன்றவை தமிழகத்தின் கலாச்சார அடையாளங்களாக உள்ளன.ஆகவே இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.அதனை நானும் வரவேற்கிறேன். சுப்ரீம் கோர்ட்டுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.