சிவகங்கை அரசு கலைக்கல்லூரிகளில் பட்டப் படிப்புக்கான சேர்க்கைக்கு கலந்தாய்வு துவங்கியது!
1022 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசுக் கலைக் கல்லூரியில் பட்டப் படிப்புகளுக்கான மாணாக்கர் சேர்க்கை இன்று தொடங்கப்பட்டது. இதில் பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கான 378 இடங்களுக்கான சேர்க்கைக்கு கலந்தாய்வு துவங்கியது. இதில் சிவகங்கை மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம், இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 756 மாணவ மாணவிகள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். மேலும் நாளை பி காம் வணிகவியல் பிபிஏ வணிக மேலாண்மை ஆகிய பட்டப் படிப்புகளுக்கும் 3.6.2023 அன்று பிஏ வரலாறு பி ஏ பொருளியல் பட்டப்படிப்புகளுக்கும் 5.6.2023 தேதியில் பி ஏ தமிழ் பிஏ ஆங்கிலம் ஆகிய பட்டப்படிப்புகளுக்கு மாணவ மாணவிகளுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கைக்கான காண கலந்தாய்வு நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.