அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வெடி சத்தம் கேட்டதால் அலறியடித்து ஓடிய பள்ளி மாணவர்கள்!
1032 views
Subscribe தமிழ்நாடு videosதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 560 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் இந்த நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் திடீரென பள்ளி வளாகத்தில் வெடி சத்தம் கேட்டதால் மாணவர்கள் அலறியடித்து வகுப்பறையில் அங்கும் இங்கும் ஓடியுள்ளனர் இதனை கண்ட ஆசிரியர்கள் பள்ளி வளாக சுற்றுச்சுவர் ஓரம் சென்று பார்த்த போது சன்னல் வெடி வெடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் அந்தப் பகுதியில் கும்பாபிஷேக விழாவிற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த 4 சன்னல் வெடியை தனது பையில் போட்டு பள்ளிக்கு எடுத்து வந்து ஒரு சன்னல் வெடியை வெடித்தது தெரிய வந்தது பின்னர் தகவல் அறிந்து வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் மற்றும் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை மேற்கொண்டு கண்டித்தனர் மேலும் மாணவன் தனது பையில் வைத்திருந்த மூன்று ஜன்னல் வெடியை கைப்பற்றி போலீசார் கொண்டு சென்றனர்.ஆம்பூரில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் சன்னல் வெளியே பள்ளிக்கு கொண்டு வந்து பள்ளி வளாகத்தில் வெடிக்க வைத்த சம்பவம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது