உலக சுற்றுசூழல் தினத்தை முட்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மரக்கன்று நடும் விழா!
சிவகங்கையில் உலக சுற்றுசூழல் தினத்தை முட்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மரக்கன்று நடும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் தலைமையில், காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட வளம் மீட்பு பூங்காவில் 120 மரங்களும் காஞ்சிரங்கால் கண்மாய் கரையை மேம்படுத்தி கரையோரம் 150-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து திட்டஅலுவலர் சிவராமன் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர் தொடர்ந்து மகளிர் சுய உதவிப் பெண்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு மரக்கன்றுகளை பூங்காவிலும் கண்மாய் கரையோரங்களிலும் நடவு செய்தனர் தொடர்ந்து இதனை பராமரிப்பதற்காக தண்ணீர் ஊற்றி வளர்க்க சுய உதவி குழு பெண்களை நியமித்துள்ளனர். உலக சுற்றுசூழல் தினத்தை முட்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் காஞ்சிரங்கால் ஊராட்சியில் மட்டும் இன்று ஒரே நாளில் 300 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதுtamilnaduTimesXP TamilUpdated: 5 Jun 2023, 2:00 pm - TimesXP Tamil
- tamilnadu
- Sapling Planting Ceremony On Behalf Of Rural Development And Panchayat Department On The Occasion Of World Environment Day!