ஏத்தாப்பூரில் காதை அறுத்து நகை கொள்ளையடித்த பெண் உட்பட இரண்டு பேர் கைது!
1032 views
Subscribe சேலம் videosசேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூரைச் சேர்ந்த உதயகுமார் இவரது மனைவி விஜயா (67) இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார், இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி ஒரு பெண் ஒரு ஆண் ஆகிய இருவரும் கடைக்கு வந்து தண்ணீர் குடிக்க கேட்டுள்ளனர் கடையில் இருந்த மூதாட்டி விஜயாவிடம் கேட்டுள்ளனர் மூதாட்டி விஜயா தண்ணீரை எடுத்து வர வீட்டிற்குள் சென்றபோது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்று விஜயாவை தாக்கி அவரது காதை அறுத்து சங்கிலி வளையல் தோடு என ஏழு பவுன் நகையை கொள்ளை அடித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர் படுகாயம் அடைந்த விஜயா ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இது குறித்து ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து வாழப்பாடி காவல்துணை கண்காணிப்பாளர் ஹரிசங்கரி தலைமையிலான இரண்டு தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு சந்தேகத்திற்கு இடமான இரண்டு பேர் வந்தனர் அவர்கள் இருவரும் அங்கிருந்த போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர் அப்போது போலீசார் அவர்கள் இருவரையும் போலீசார் துரத்தி பிடித்து விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த சாமுவேல் மனைவி மோனிஷா (32) மற்றும் அவரது அக்கா மகனான விழுப்புரம் மாவட்டம் திருமலைப்பட்டுவை சேர்ந்த சுப்பன் மகன் சுபாஷ் (22) என்பதும் தெரிய வந்தது மேலும் இவர்கள் ஏத்தப்பூர் விஜயாவை தாக்கி நகையை கொள்ளை அடித்ததும் ஒப்புக்கொண்டனர் இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஏழு பவுன் தங்க நகையை மீட்டனர் மேலும் கொள்ளை அடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் முத்து மலை முருகன் கோவிலில் சிறிது நேரம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.