அரசு புறம்போக்கு நிலத்தில் கோயில் கட்டுவதை நிறுத்திய வருவாய்த்துறை!
1090 views
Subscribe சேலம் videosசேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமத்தில் மோட்டூர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இதனையடுத்து அவர்கள் அரசு ஓடை புறம்போக்கு நிலத்தில் மண் கொட்டி சிறிய அளவில் கல் வைத்து வணங்கி தெய்வமாக வணங்கி வருகின்றனர் இந்நிலையில் அதே இடத்தை வருவாய்த் துறையினர் சில நாட்களுக்கு முன்பு அரசு பயன்பாட்டிற்காக ஆய்வு செய்து அளவீடு செய்தனர் இதை அறிந்த அப்பகுதி மக்கள் இந்த இடத்தில் நாங்கள் கோயில் கட்டபோவதாகவும் அந்த இடத்தில் அரசாங்கம் எதுவும் செய்யக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது சம்பந்தமாக ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்ட வருவாய் துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இது அரசுக்கு சொந்தமான இடம் தற்போது அரசு தேவைக்காக பயன்படுத்து உள்ளோம் நீங்கள் கோவில் கட்டக்கூடாது என்றும் வருவாய்த்துறை சார்பில் உங்களுக்கு மாற்று இடம் தருகிறோம் அதில் நீங்கள் கோவில் கட்டிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்ததனர்ஆனாலும் இதை ஏற்காத அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து 50க்கும் மேற்பட்டோர் ஆத்தூர் பெரம்பலூர் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் போரட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி போலீசார் மற்றும் கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன் ஆகியோர்கள் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.