கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாய் புகார்
1068 views
Subscribe சேலம் videosபன்னிரெண்டாம் வகுப்பு படித்த எனது மகளை தேர்வு எழுத விடாமல் அடித்து கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் தாய் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்உயிரிழந்தால் தான் வழக்கு பதிவு செய்வோம் என்று காவல் நிலையத்தில் கூறியதாக வேதனை.சேலம் மாவட்டம் மேச்சேரியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி செல்வராஜின் மனைவி பூங்கொடி மகள்கள் புவனேஸ்வரி கஸ்தூரி மற்றும் மகன் தரன் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர் அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பூங்கொடி, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கணவரின் அண்ணன் முருகேசன் மற்றும் அவரது மகன்கள் சவுந்தர் மணிகண்டன் ஆகியோர் தங்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் கேட்டனர் அதற்கு மறுத்ததால் ஏற்பட்ட விரோதத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அப்போது காவல் துறையினர் அறிவுறுத்தலின்படி தங்களது வீட்டின் முன்பு சிசிடிவி கேமராக்கள் வைத்ததாகவும் அந்த கேமராவை வைப்பதற்கு முருகேசன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 8ம் தேதி சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் தனது இரண்டாவது மகள் கஸ்தூரி மீது தாக்குதல் நடத்தி மண்டையை உடைத்ததாகவும், அவர் பள்ளிக்குச் செல்ல விடாமல் அவருடைய சைக்கிளை சேதப்படுத்தியதாகவும் இது தொடர்பாக மல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது திமுக ஊராட்சி தலைவர் உமா சங்கர் தலையிட்டால் ஏற்க மறுத்ததுடன் கை கால் முறிவு ஏற்பட்டாலும் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் தான் வழக்கு பதிவு செய்வோம் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்இந்த நிலையில் தாங்கள் வீட்டிற்கு செல்லும் வழியை சுவர் வைத்து அடைத்துவிட்ட நிலையில் வீட்டிற்கு சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் கடந்த 10 நாட்களாக தோட்டத்தில் படுத்து உறங்குவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.