சேலம் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் பயங்கர தீ விபத்து:காவல் துறையினர் விசாரணை!
1043 views
Subscribe சேலம் videosசேலம் புதிய பேருந்து நிலையத்தில் தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட புறநகர் பெருந்துக்கள் வந்து செல்கிறது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா தமிழ்நாடு ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் பேருந்துக்கள் சென்று வருகிறது இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் முதல் பிளாட்பார்ம் பகுதியில் உள்ள பயண சீட்டு பரிசோதகர் மற்றும் நேரம் காப்பாளர் அறையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது யாரும் எதிர்பார்க்காத விதமாக கொழுந்து விட்டு தீ எரிய தொடங்கியதால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அலையடித்து ஓட்டம் பிடித்தனர் மேலும் அருகில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு பேருந்து நிலையத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டது சுமார் அரை மணி நேரம் கொழுந்துவிட்டு எரிந்த தீயினை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் இதனால் பேருந்து நிலைய வழக்கத்தில் இருந்த மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் என்ன என்று குறித்தும் ஏதாவது சதி வேலையா என்பது குறித்தும் அல்லது மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது