கல்லூரி பேருந்துகளை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
1011 views
Subscribe சேலம் videosசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் பேருந்துகள் ஆய்வு பணி ஆத்தூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது,அப்போது ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டு வீட்டிலோ அல்லது பேருந்துகளிலோ தீப்பற்றினால் எவ்வாறு எளிதில் தீயை அணைக்க வேண்டும் என்றும் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது, அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழு சார்பில் பேருந்துகளில் விபத்து ஏற்பட்டால் அதில் காயம் அடைந்தாலும் அல்லது கை கால் முறிவு ஏற்பட்டாலும் உடனடியாக முதல் சிகிச்சை அளிப்பது எவ்வாறு என்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு செய்முறை விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,மேலும் இங்கு நடைபெற்ற மோட்டார் வாகன ஆய்விற்காக தலைவாசல், ஆத்தூர், இத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், வீரகனூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் கொண்டுவரப்பட்ட 350க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா அவர்கள் பேருந்துகளில் குழந்தைகளை ஏற்றி செல்வதால் எவ்வாறு பாதுகாப்பு உள்ளது என்றும் பேருந்துகளை ஆய்வு செய்தார், இதில் பொறுப்பு ஆத்தூர் வட்டார மோட்டார் வாகன அலுவலர் அறிவழகன், ஆத்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் நாகராஜ், மற்றும் ஆத்தூர் வட்டார மோட்டார் வாகன அலுவலர்களும் ஆய்வின்போது உடன் இருந்தனர்.