மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி பிரிட்ஜ் பூஷனை கைது செய்ய ஆர்ப்பாட்டம்!
1031 views
Subscribe சேலம் videosபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பாஜக எம் பி பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல நாட்களாக டெல்லி ஜந்தர்மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராடி வந்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, குண்டுகட்டாக தூக்கி கைது செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் வென்ற தங்கள் பதக்கங்களை கங்கையில் வீச சென்ற மல்யுத்த வீரர்களை, விவசாயிகள் தடுத்து நிறுத்தி சமாதனப்படுத்தினர்.இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி பிரிஜ் பூசனை கைது செய்ய வேண்டும் எனவும் மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சி ஐ டி யு, ஏ ஐ டி யு சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக எம்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்னும் கைது செய்யப்படாததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது வரும் 9 ஆம் தேதிக்குள் கைது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் விவசாயிகள், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்