பள்ளியில் கட்டணக் கொள்ளை நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு
1039 views
Subscribe சேலம் videosசேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமை சட்டத்தின் மூலம் குழுக்கள் நடைபெற்று தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் அந்தந்த பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் அவ்வாறு சேர்க்கப்படும் பள்ளி மாணவர்களின் பெற்றோர் இடத்தில் கூடுதல் மற்றும் தேவையற்ற கட்டணங்களை வசூலிக்கப்பட்டு வருவதாகவும் 6,300 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாகவும் புத்தக கட்டணம் சீருடை கட்டணம் எழுதுபொருள் கட்டணம் என பல்வேறு கட்டணங்கள் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது இதனால் மாணவ மாணவர்களின் பெற்றோர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளை தடுத்திட வேண்டும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர் .