சேலதில் பள்ளி சுவர்களை இடித்து பொருட்களை திருடிய நபர்கள்!
1019 views
Subscribe சேலம் videosசேலம் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார் இவருடன் சிலர் பங்குதாரர்கள் இருந்துள்ளனர் இந்த நிலையில் பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாத காலத்தால் பள்ளியை மூடி விட முடிவு செய்து அடிப்படையில் இதனை சட்டப்படி தனது பங்குதாரர்கள் தெரிவித்துள்ளார் இதனால் பங்குதாரர்களுக்கும் பள்ளியின் தாளாளர் சரவணனுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கடந்த 2ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் சிவகுமார் அய்யன் துறை ஆகியோர் அடியாட்களுடன் வந்து வேலியை உடைத்து எறிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராக்களை சேதப்படுத்தி பொருட்களையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது இதுகுறித்து சேலம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகாரை எடுக்காமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது இதனால் அடியாட்கள் நாள்தோறும் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தும் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பலமுறை காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு சரவணன் புகார் அளித்துள்ளார் ஆனால் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்காக செயல்பட்டு வந்துள்ளனர் இந்த நிலையில் இன்று பட்டா நிலத்திற்குள் புகுந்து பாதுகாப்பு சுவர்களை உடைத்து எரிந்து அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர் காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே தங்கள் குடும்பத்திற்கு உயிருக்கும் பாதுகாப்பு வேண்டும் என பள்ளியின் தாளாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்