மருத்துவ கழிவுகளை அகற்ற நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
1050 views
Subscribe சேலம் videosமேட்டூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாள் தோறும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கையுறைகள், ஊசிகள், முகக் கவசம், காலாவதியான மருந்து ,மாத்திரைகள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய குளுக்கோஸ் பாட்டில்கள் கட்டு கட்டும் துணிகள், பஞ்சுகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை மருத்துவமனை வளாகத்தை கொட்டப்படுகிறது. இந்த கழிவுகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நகராட்சியினர் துப்புரவு பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தாமல் அப்படியே கொட்டிக் கிடைக்கிறது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கையில் பலமுறை நகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் குப்பைகளை அல்ல நிர்வாகம் முன்வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர். எனவே மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.