விடுதலை சிறுத்தை கட்சியினர் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் புத்திர கவுண்டன்பாளையத்தில் இரண்டு மற்றும் மூன்று மற்றும் ஏத்தாப்பூர் 15வது வார்டில் சுமார் 2000 மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர்.கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சர்வே எண் 148/1 இல் உள்ள சுமார் மூன்று ஏக்கர் நிலத்தில் மயான ஒதுக்கப்பட்டு பொதுமக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தில் மின் மயானம் அமைக்கப் போவதாக அதிகாரிகள் எந்தவித முன்னறிப்பும் இன்றி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயன்படுத்தி வந்த மயானத்தில் இருந்த சமாதிகள் மற்றும் இறந்தவர்களின் நினைவிடங்களை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தி அங்கு பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதிகாரிகள் உள்நோக்கத்துடன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல மின்மயணம் அமைக்க ஏற்கனவே வேறொரு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் பணிகளும் நடைபெற்று வந்த நிலையில் அந்த இடத்தை ஒட்டி உள்ள சில ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த நடவடிக்கையை கைவிட்டு தற்போது தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தில் மின்மயணம் அமைக்க நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயம் என்றும் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அதிகாரிகள் சாதிய பாகுபாட்டோடு செயல்படுவதாகவும் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரத்தில் கோரிக்கை எடுத்துள்ளனர்.மேலும் மின் மயானம் அங்கு அமைக்கப்படும் என்றால் சுற்றிலும் பள்ளிக்கூடங்களும் கிறிஸ்துவ ஆலயங்களும் அதிகளவில் உள்ளது இதனால் பொதுமக்கள் பெரும் இடையூறுக்கு ஆளாக நேரிடும் எனவே ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மின்மயணம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என கேட்டுக் கொண்டனர்.salemTimesXP TamilUpdated: 2 May 2023, 5:56 pm