காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு பணிகள் தீவிரம்
1032 views
Subscribe சேலம் videosமேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் வருவதை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் தீவிரம்.மேட்டூர் அனையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும்ஜூன் 12ல் காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் சேலம், நாமக்கல் ,கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி வரும். தற்போது அணையில் 103 அடி தண்ணீர் இருப்பதால் முதலமைச்சர் மு.க ,ஸ்டாலின் ஜீன் 12-ல் குருவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்கிறார்.இதனை முன்னிட்டு நீர்வளத் துறை சார்பில் அணையின் வலது கரை, இடது கரையில் உள்ள புதர்கள், செடி கொடிகள் அகற்றப்பட்டு, தூய்மை படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.கர்நாடக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தற்போது மழை துவங்கியுள்ளத்தால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,850 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திக்கு நீர் திறக்க இன்னும் 13 நாட்கள் இருக்கும் நிலையில் மேட்டூர் அணையில் பொதுபணித்துறை சார்பில் பராமரிப்பு தீவிரமாக பணி நடைபெற்று வருகிறது.