சேலம் மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை!
சேலத்தில் கோடை காலம் தொடக்கத்திலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக சேலத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியது. இந்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகளவிலேயே இருந்தது. இதனிடையே நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது. இதனை யடுத்து சுமார் 10 மணி அளவில் சேலம் மாநகர் அஸ்தம்பட்டி, அரிசி பாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரம் வரை ஒரு சில இடங்களில் மிதமாகவும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது. இந்த கோடைமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குழுமையான சூழல் நிலவியது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்க்குள்ளாயினர் விடிய விடிய மழைநீர் வீட்டில் இருந்து வெளியேற்றும் சூழ்நிலை ஏற்பட்டது கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து மக்களை ஆறுதல் படுத்தும் வகையில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக சேலத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறதுsalemTimesXP TamilUpdated: 2 May 2023, 11:35 am