சேலத்தில் கனமழை;வேப்ப மரம் வேறுடன் சாய்ந்தன;போக்குவரத்து பாதிப்பு!
Subscribe சேலம் videos
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வந்த நிலையில் மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென இரவு நேரத்தில் இடி மின்னல் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை சுமார் ஒருமணி நேரமாக பெய்தது இதனால் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை உழவர் சந்தை அருகில் உள்ள பழங்கால பெரியளவில் இருந்த வேப்ப மரம் சூறைக்காற்றால் வேறுடன் சேலம் கடலூர் பிரதான சாலையின் நடுவே சாய்ந்தது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர் இப்பகுதியில் கனரக இலகு ரக வாகனங்கள் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் மரம் சாய்ந்ததால் அப்பகுதியில் இருந்த மின்கம்பம் உடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியே இருளில் மூழ்கியது, இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள். மரத்தின் அடியில் இருந்த மூன்று இரு சக்கர வாகனமும் சேதமடைந்தன மேலும் அப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இதைனையடுத்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் வருவாய்துறை மற்றும் நகர போலீசார், அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் சாலையின் நடுவே சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்ஆத்தூர் பகுதியில் திடீரென இடி மின்னல் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் சாலையில் நடுவே வேப்பமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.