சிறை கைதிகளை உற்சாகப்படுத்திய சிறை துறை அதிகாரிகள்
1015 views
Subscribe சேலம் videos
Like
Comment
Share
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பள்ளி துறை தலைவர் அம்ரேஷ் குஜராரி மற்றும் கோவை சிறைத்துறை துணை தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பெண்கள் சிறையில் மன அழுத்தங்களை போக்கும் விதமாக சிறப்பு கலை நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெற்றது. இதன்படி சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள மத்திய சிறையில் கைதிகளுக்கு மன அழுத்தத்தினை குறைக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சில போட்டிகளும் நடத்தப்பட்டது