சென்னையில் மிக்ஜாம் புயல் சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது .இதன் விளைவாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வருகின்றனர். இந்நிலையில் சென்னைக்கு புயல் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்று வருகிறது