முதல் இலகுரகவாகனங்கள் ஏற்காடு பிரதான சாலையில் செல்ல அனுமதி!
1057 views
Subscribe சேலம் videosசேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் 2 மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து அங்கு சாலை பராமரிப்பு பணிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.இந்த சாலை பணிகளை அவ்வப்போது சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.இந்த நிலையில் சாலை பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்காட்டில் அயோத்தியபட்டினம் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதனால் அயோத்தியபட்டினம் குப்பனூர் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறி உள்ளது சாலை அமைக்கும் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் சாலையின் தரம் பயன்படுத்தப்படும் பொருட்கள் உறுதி தன்மையை ஆய்வு செய்து தொடு மேலும் மண் சரிவு ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பட்டு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டார் ஏன் அடுத்து மாவட்ட ஆட்சியர் கூறும் போது ஏற்காடு மலை பாதையில் தற்போது சாலை பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தற்போது பிரதான சாலை வழியாக இருசக்கர வாகன மட்டுமே அனுமதிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில் வருகின்ற சனிக்கிழமை முதல் கார் ஆட்டோ உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தெரிவித்தார்.இன்னும் ஒரு சில நாட்களில் குறிப்பிட்ட காலத்திற்கு பணியும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் விரைவில் அனைத்து வாகன போக்குவரத்தும் பிரதான சாலையில் தொடங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்அதேபோல் மலை பாதையில் வாகனங்கள் செல்லும்போது கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் ஏற்காடு செல்லும் அனைத்து வானங்களும் ஆய்வு உட்படுத்தப்பட்ட பின்னரே மேலே செல்ல அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம். தெரிவித்தார்