ஏற்காடு கோடை விழாவில் படகு போட்டி!
1023 views
Subscribe சேலம் videosஏற்காடு கோடை விழாவில் படகு போட்டி.தம்பதியர்களுக்கு நடந்த போட்டியில் ஏற்காட்டை சேர்ந்த பிரவீன் -நிஷா ஜோடி முதலிடம் பிடித்தனர்.அரச்சலூரை சேர்ந்த பிரேமா -சண்முகசுந்தரம் இரண்டாம் இடமும்,புதுவையை சேர்ந்த திவ்யா -தங்கராஜ் மூன்றாம் இடமும் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.விழாவை யொட்டி இன்று படகு இல்லத்தில் படகு போட்டி நடந்தது .இதில் திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் ஏற்காட்டைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் ஒற்றைய இரட்டையர் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே விசைப்படகு துடுப்பு படகு என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று ஏரிக்கரையை தொட்டுவிட்டு வரவேண்டும் என்பது இலக்காக நிர்ணியக்கப்பட்டிருந்தது அப்போது படகு போட்டியினை காண வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கைதட்டி பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தினர் முதலில் தம்பதியர்களுக்கு நடந்த போட்டியில் அரச்சலூரை சேர்ந்த பிரேமா -சண்முகசுந்தரம் முதலாமிடத்தையும் ஏற்காட்டை சேர்ந்த பிரவீன் -நிஷா ஜோடி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர் .புதுவையை சேர்ந்த திவ்யா -தங்கராஜ் ஜோடி மூன்றாம் இடமும் பிடித்தனர் .தொடர்ந்து பெண்களுக்கான படகு போட்டியில் சென்னையை சேர்ந்த தமிழ்ச்செல்வி - பார்கவி முதலிடத்தையும் சென்னையை சேர்ந்த சஞ்சனா -சஹானா இரண்டாம் இடம் பிடித்தனர்.புதுவையை சேர்ந்த வித்யாலட்சுமி - மாயா மூன்றாம் இடம் பிடித்தனர்.ஆண்களுக்கான் நடந்த படகு போட்டியில் ஏற்காட்டை சேர்ந்த காமராஜ்- மோகன் முதலிடத்தையும் செஞ்சியை சேர்ந்த ரவி -தருண் இரண்டாம் இடத்தையும் செஞ்சியை சேர்ந்த ஆனந்த் -ராஜதுரை மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். துடுப்பு போட்டியில் ஏற்காட்டைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்தார் .இரண்டாம் இடத்தை வினோத்தும்,மூன்றாம் இடத்தை ராமரும் பிடித்தனர். இவர்கள் இருவரும் ஏற்காட்டை சேர்ந்தவர்கள்.இல்லத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நடந்த இரட்டையர் படகு போட்டியில் முதலிடத்தை திவ்யா மற்றும் பலராமன் ஆகியோர் பிடித்தனர் .இரண்டாம் இடத்தை அஜித் -ராஜா பிடித்தனர்.மூன்றாம் இடத்தை திலகவதி - ரவிவர்மன் பிடித்தனர்.தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.இதில் கூட்டுறவுத்துறை சேலம் மண்டல துணை பதிவாளர் பரமசிவம்,சேலம் மாவட்ட சுற்றுலா அதிகாரி உமாதேவி ,தமிழ்நாடு ஹோட்டல் உதவி மேலாளர் கோபி ஆகியோர் வெற்றி பெற்றவர்கள் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்