கன்னியாகுமரி: நாகர்கோவிலில் ரயில்வே தண்டவாளங்கள் தொடர் கண்காணிப்பு
1060 views
Subscribe சேலம் videosசேலம் மாவட்டம் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தானியங்கி சிக்னலை மர்ம நபர் ஒருவர் உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து ரயில் பாதைகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் ரயில்வே போலீசார் உசார் படுத்தப்பட்டுள்ளனர் இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் தண்டவாளங்களில் நாச வேலைகளை தடுக்க ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 24 மணி நேரமும் ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் நடந்து சென்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் கன்னியாகுமரி முதல் குழித்துறை வரையிலும் அவர்கள் தண்டவாளங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று தண்டவாளங்களில் நாச வேலைகள் ஏதாவது செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து வருகிறார்கள் தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என்று ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்