அந்தோணியார் ஆலய திருவிழா:ரயில்கள் நின்று செல்லுமென அறிவிப்பு!
1057 views
Subscribe சேலம் videosஅந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் எக்பிரஸ் ரயிகள் நின்று செல்லும் அதிகாரிகள் தகவல்.அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா,மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் 1 நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளதுகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் 117- வது ஆண்டு திருவிழா நடைபெற உள்ளன, இதையொட்டி சில ரயில்கள் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் ஜூன் மாதம் 11 ந் தேதி முதல் 14 ந் தேதி வரை 1 நிமிடம் நின்று செல்லும்,அதன்படி புதுச்சேரி - யஷ்வந்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16574) ரயில் புதுச்சேரியில் இருந்து ஜூன் மாதம் 10 ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 1.35 மணிக்கு வந்தடையும், இங்கிருந்து 1.36 மணிக்கு புறப்படும்,சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 22153) ஜூன் மாதம் 10 ந் தேதி மற்றும் 13 ந் தேதி சென்னை எழும்பூர் ரயில் இணையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.19 மணிக்கு மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்திற்கு வந்தடையும், இங்கிருந்து 4.20 மணிக்கு புறப்படும்,இதேபோல் மறு மார்க்கத்தில் சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 22154) ஜூன் மாதம் 11 ந் தேதி மற்றும் 14 ந் தேதி சேலத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மேல்நாரியப்பனூருக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும், இங்கிருந்து 10.46 மணிக்கு புறப்பட்டு செல்லும், என ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,