ஏற்காடு பிரதான சாலையில் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் அனுமதி!
1069 views
Subscribe சேலம் videosஏற்காடு பிரதான சாலையில் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் அனுமதி .மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. கோடை விழா முடியும் வரை ஒரு வழிச்சாலையாக மாற்றம் என அறிவிப்பு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்.ஏற்காடு மலைப்பாதையின் 2வது கொண்டை ஊசி வளைவில் நடைபெற்றுவந்த சாலை சீரமைப்புப் பணி முழுமையாக நிறைவடைந்ததையொட்டி இன்று (20.05.2023) பிற்பகல் 2 மணி முதல் அஸ்தம்பட்டி - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்வதற்கு இரண்டு சக்கர, இலகு இரக மற்றும் கன இரக வாகனம் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறது.மேலும், ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியையொட்டி ஒருவழிப் பாதையாக அஸ்தம்பட்டி - கோரிமேடு வழியாக ஏற்காட்டிற்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் கோடை விழா முடிவடையும் வரை ஏற்காடு - குப்பனூர் சாலை வழியாக மட்டும் கீழிறங்கும் வகையில் ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ன மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்