புகழேந்தியை அடிக்க பாய்ந்த அதிமுகவினர்பெங்களூரு புகழேந்தியை அடிக்கப் பயந்த அதிமுகவினர் ..காரின் கண்ணாடி திறக்காததால் தாக்குதலில் இருந்து தப்பினர்... தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் இதன் அடிப்படையில் கடந்த 19ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கு ப பிரபாகரன் பிரபாகரன் மற்றும் பெங்களூர் புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த பெங்களூர் புகழேந்தியை எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர் சூழ்ந்துகொண்டு அவரை அவதூறாக பேசுவதோடு தாக்கத் தொடங்கினர் காரின் உள்ளே அமர்ந்திருந்தவாறே இதனை கவனித்த புகழேந்தி காரின் ஜன்னலை திறக்காமல் இருந்ததால் கார் கண்ணாடியை உடைக்க முயன்றனர் அதற்குள் சமாளித்துக் கொண்ட கார் ஓட்டுநர் வேகமாக காரை இயக்கியதால் பெங்களூர் புகழேந்தி தாக்குதலில் இருந்து தப்பினார் தொடர்ந்து அங்கு ஓடி வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது காவல்துறையினர் விரைந்து வந்து இருத் தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டது அங்கு இருப்பவர்களை முகம் சுழிக்க செய்தது சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..