அதிகாரிகளை கூட்டிக்கொண்டு வீடு சென்று மக்கள் குறைகளை கேட்டு அறிந்த மாமன்ற உறுப்பினர்!
1049 views
Subscribe சேலம் videosசேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அடிப்படை வசதிகளை தீர்க்க அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சி 34 வது கோட்ட பகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை அதிகாரிகள் தெரிந்து கொள்ளும் வகையில் மக்கள் குறை கேட்கும் முகாம் இன்று நடைபெற்றது இந்த முகாமில் அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் 34வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ ஆகியோர் மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டல செயற்பொறியாளரை தங்களுடன் அழைத்துக் கொண்டு வீடு வீடாக சென்று மக்கள் குறைகளை நேரில் கேட்டனர்.அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்தனர் தொடர்ந்து உயர் அதிகாரியை நேரடியாக வீடுகள் தோறும் அழைத்துச் சென்று மக்கள் குறைகளை கேட்க வைத்தனர் அப்போது சாலை சாக்கடை குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உடனுக்குடன் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கும் எந்த புகாருக்கும் சுணக்கம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் மண்டல குழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆகியோர் அதிகாரிகளிடம் ஆலோசனைகளை வழங்கினர்இதே போல அம்மாபேட்டை பகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகளை நேரடியாக அழைத்துச் சென்று மக்கள் குறைகளை கேட்க வைத்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழி வைக்க செய்தனர். மாமன்ற உறுப்பினரின் இந்த செயல்பாடு பொதுமக்களில் பாராட்டை பெற்றது