எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1072 views
Subscribe சேலம் videosதொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் எட்டு மணி நேர வேலை சட்டத்தை பறிக்கும் வகையில் எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் விதமாக தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ள தமிழக அரசை கண்டித்து சிஐடியு மாவட்ட துனைத் தலைவர் பி. பன்னீர்செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தொழிலாளர்கள் போராடி பெற்ற சட்டத்தை திருத்தக் கூடாது, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை பின்பற்றக் கூடாது, அனைவருக்கும் 8 மணி நேர வேலையை உத்தரவாதம் படுத்த வேண்டும், 12 மணி நேரமாக வேலையை உயர்த்த கூடாது.தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக 1948ல் கொண்டு வந்த தொழிலாளர் நல சட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்,தொழிலாளர்களை வஞ்சிக்க கூடாது என வலியுறுத்தினர். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ. கோவிந்தன், மாவட்ட பொருளாளர் இளங்கோ, மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்