ஜல்லிக்கட்டு காளைகளை செல்போனில் தவறாக ஸ்டேட்டஸ் போட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது
1011 views
Subscribe சேலம் videosசேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உலிபுரம் அணைக்கட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ரங்கதுரை(25) பால் வியாபாரம் செய்து வரும் நிலையில் அவர் ஜல்லிக்கட்டு காளையும் வளர்த்து வருகிறார், இந்நிலையில் ரங்கதுரையின் ஜல்லிக்கட்டு காளை கடந்த மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பிடிபட்டதாகவும் இதனால் உலிபுரம் பாம்பன் கோவில் அருகில் உள்ள செந்தில்குமார் மகன் விஷ்ணு (22) என்பவர் தங்கதுரையின் பிடிபட்ட காளையையும் ரங்கதுரை பற்றியும் தவறாக தனது செல்போன் ஸ்டேட்டஸில் வைத்திருந்ததாகவும் இதை ரங்கதுரை விஷ்ணுவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது ,இதனையடுத்து இன்று காலை ரங்கதுரை மற்றும் அவரது நண்பர்கள் ஆன அரவிந்த், கணேசன் ஆகியோர்களிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார், அப்போது விஷ்ணு மற்றும் அவரது நண்பர்கள் ஆன கவின் என்கிற பூபாலன், கணபதி ஆகியோர் கள் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ரங்கதுரை கண்டதும் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரங்கதுரை யை தகாத வார்த்தைகளால் பேசி அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரங்கதுரை வெட்டியதாகவும் அவருடன் வந்த நண்பர்கள் கவின் என்கிற பூபாலன் தினேஷ் ஆகியோரும் ரங்கதுரை பிடித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது, மேலும் ரங்கதுரை கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இவர்கள் அங்கிருந்து மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர், மேலும் ரத்தம் வழிந்து மயக்கம் அடைந்த ரங்கதுரையை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தம்மம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுமுதல் சிகிச்சை பெற்று பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர், பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தம்மம்பட்டி போலீசார் செந்தில்குமார் மகன் விஷ்ணு (22)கணபதி மகன் கவின் என்கிற பூபாலன் (20)மற்றும் தினேஷ் 17 என்கிற சிறுவன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர், வாலிபரை கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.