13 பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை இச்சம்பவத்தால் பரபரப்பு!
1044 views
Subscribe சேலம் videosசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஓடைப்பகுதியில் இன்று வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது ஒரு முட்புதரிலிருந்து பெரும் கூட்டமாக விஷ வண்டுகள் வேகமாக துரத்தியதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பொதுமக்கள் அலரி அடித்துக்கொண்டு அங்கும் இங்கு மாக ஓடிச் சென்றனர் அப்போது விசவண்டுகள் ம (கதண்டு) கடித்ததில் செல்லம்மாள், முத்தம்மாள், தங்கமணி, சுபா, அஞ்சலை, பெரியம்மாள், செல்லம்மாள், ராஜாமணி, பிரியா, செல்லம்மாள், சிவா, சங்கீதா,அழகம்மாள் உள்ளிட்ட 13 பேர் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர், இதை அறிந்த ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் அரசு அதிகாரிகளும் உடனடியாகஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு உங்களுக்கு ஆறுதல் கூறினர்.தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த மக்களை விஷ வண்டுகள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.