குடிநீர் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
1113 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எம்.புதுக்குளம் ஊராட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை என்றும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் விநியோகம் இல்லை என்றும், வேறு எந்த குடிநீர் திட்டங்கள் மூலமும் தங்களது கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து கொடுக்ககோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்ததால், போலீசாரோடு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி 10 பேரை மட்டும் உள்ளே அனுப்ப அனுமதித்ததன் காரணமாக தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து வந்திருந்த பெண்கள் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். இதற்கு ஆட்சியர் கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.