புதிய ஆட்சித் தலைவராக விஷ்ணு சந்திரன் பதவி ஏற்றார்!
1043 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பி.விஷ்ணு சந்திரன் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுஎகொண்டார், அனைத்து துறை அரசு புதியதாக பொறுப்பேற்று கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ராமநாதபுரத்தில் பணியாற்றியதைப் போல நானும் பணியாற்றி பொது மக்களுக்கு நல்லது செய்வேன் என புதிய ஆட்சியர் விஷ்ணு சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றிய ஜானி டேம் வர்கீஸ் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்று விட்டார், இதனை அடுத்து புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பி.விஷ்ணு சந்திரன் இராமநாதபுரம் மாவட்டத்தின் 27 வது மாவட்ட ஆட்சித் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார், அவருக்கு அனைத்து துறையின் சார்பில் அரசு அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.