பணம் வைத்து சூதாடிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!
1068 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்கரை அருகே புல்லமடை செல்லும் பாதையின் மரத்தடியில் 4 பேர் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற காவல்துறையினரைக் கண்டதும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர், காவல்துறையினர் அவர்களை மடக்கிபிடித்து விசாரித்ததில் செட்டியமடை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த பாண்டித்துரை, ராஜ்குமார், பொய்யாமொழி, நாகராஜன் என்பதும், இவர்கள் 52 சீட்டு கட்டுகளுடன் 200 ரூபாய் பணம் வைத்து உள்ளே வெளியே என சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.