அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா!
1029 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருள்மிகு சினேகவள்ளி தாயார் உடனாயே ஆதிரத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது,இந்த ஆலயம் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாதிக்கப்பட்ட ஆலயமாகும். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 சிவ ஸ்தலங்களில் இக்கோவில் 8வது ஸ்தலமாக உள்ளது. இக்கோவில் மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக நேற்று இரவு கணபதி பூஜை, வாஸ்த்து சாந்தி , துஜபடம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது.விழாவின் சிறப்பு நிகழ்வாக வரும் ஜூன் 1ஆம் தேதி சுவாமி அம்மன் இரண்டு தேர்களில் சுற்றி வரும் பெருந்தேரோட்டம் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் இருபத்து இரண்டரை நாட்டார்கள், ஆடானை வளர்ச்சி குழு, ஆதி நன்பர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.