பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி பட்டறை வகுப்புகள் இன்று தொடங்கியது!
1076 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னக் கீரமங்கலத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி பட்டறை வகுப்புகள் நடைபெற்றது.இந்த பயிற்சி வகுப்புகளை திருவாடானை வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையேற்று துவங்கி வைத்தார், ஓவிய பயிற்சி, கதை எழுதுதல், கதை சொல்லுதல், நாடக பயிற்சி, காகித மடிப்பு பயிற்சி, ஓலை மடிப்பு ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு உணவு , மற்றும் பயிற்சி பொருட்கள் இலவசமாக அரசால் வழங்கப்படுகிறது.தொடர்ந்து மூன்று நாட்கள் காலை மாலை நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பு பட்டரையில் ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெருகின்றனர். இந்த நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.