சென்னையில் இருந்து கடத்திவரப்பட்ட சுறா மீன் பீலி பறிமுதல்!
1029 views
Subscribe ராமநாதபுரம் videosசென்னை எலும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு ராட்சத பீலி சுறா இறகுகள் மூடை மூடையாக கொண்டுவரப்பட்டது, இது பற்றி ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினக்கு தகவல் கிடைத்தது, இதனைத் தொடர்ந்து மாவட்ட வனத்துறை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில், ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலையத்திலிருந்து மாருதி வாகனத்தில் சுறா இறகுகள் ஏற்றுவதை அறிந்து உடனடியாக காவல்துறை தடுத்து விசாரணை மேற்கொண்டனர்.இதனைக் கொண்டு வந்த இருவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் இருவரிடம் பல்வேறு கட்டமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மேலும் ராட்சத சுறா இறகுகள் பல லட்சங்கள் மதிப்பில் ஆன சுமார் 350 கிலோ சூறா பீலி இறகுகள் இருந்தது. மொத்தமாக 20 மூட்டைகள் மற்றும் மாருதி வேன் பறிமுதல் செய்யப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தமிழ்நாடு வனச்சரக தடுப்பு பிரிவில் இவைகள் வருகிறதா என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவு அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளது. இங்கிருந்து தான் பல இடங்களுக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு எதற்காக கொண்டுவரப்பட்டது. இதன் பின்னணி விபரங்கள் என்ன என்பது பற்றி வனத்துறையிடம், காவல்துறை விசாரித்து வருகின்றனர், மேலும் மத்திய, மாநில அரசால் தடை செய்யப்பட்ட பொருளா என்பது பற்றியும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து படகுமூலம் இலங்கைக்கு பீலி சுறா இறகுகள் கடத்தப்பட இருந்ததா என்பது பற்றியும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.