ராமநாதபுரத்திற்கு ரூ.2819 கோடியில் புதிய காவிரி குடிநீர் திட்டம் துவக்கம்!
1031 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் நகராட்சியின் மாதந்திர நகர்மன்ற கூட்டம் நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக போக்கிடும் வகையில் 2,819 கோடி நிதி ஒதுக்கீ செய்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கிட நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடிநீர் தட்டுபாடு உள்ள நிலையில் அனைவருக்கும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வீடுகளில் மோட்டர் பயன்படுத்தி தண்ணீர் எடுத்தால் பறிமுதல் செய்யப்படும் என நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் தெரிவித்தார். இதில் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தார், நகர் மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் அய்யனார், குமார், ரமேஷ் கண்ணா, ஸ்டாலின், காளிதாஸ், ஜெயராமன், ராமநாதன், நாகராஜன் உள்ளிட்டோர் தீர்மானங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினர், அதற்கு நகர மன்ற தலைவர் கார்மேகம் மற்றும் நகராட்சி பொறியாளர், நகராட்சி ஆணையாளர் ஆகியோர் தகுந்த பதில் அளித்தனர். இதில் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.