ராமநாதபுரம்: சமஸ்தானம் தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர்கள் பதவியேற்பு!
1108 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலராக இருந்தவரும் ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார், அப்பொறுப்புகளை விடுத்து தன்னுடைய மகள்களான இளைய ராணி வி.அபர்ணாவை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலராகவும், 2வது இளைய ராணி வி.அஸ்மிதாவை ராமநாதபுரம் சமஸ்தானம் சத்திரங்கள் பரம்பரை அறங்காவலராகவும் நியமித்துள்ளார். அவர்கள் இருவரும் நேற்று அரண்மனை கோட்டைவாசல் விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதனையடுத்து பதவியேற்பு விழா நேற்று மாலை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் தலைமை அலுவலகத்தில் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இதில் இருவருக்கும் ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார் பதவியேற்பு, விழாவிற்கு தலைமை வகித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ராம்குமார், மற்றும் ராணியின் உறவினர்கள் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, ராணி லெட்சுமி நாச்சியார், மகாலட்சுமி நாச்சியார், வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி, எஸ்.கே.குமார், ராம்பிரசாத் துரை, முத்துராமலிங்கதுரை ஆகியோர் வாழ்த்தி பேசினர். மேலும் ராமநாதபுரம் அரண்மனை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அனைத்து ஆலயங்களில் இருந்து பூஜகர்கள் பதவி ஏற்று கொண்ட இளைய ராணி களுக்கு ஆலய பிரசாதங்களுடன் மரியாதை செய்து வழங்கி கௌரவித்தனர், இதில் ராமநாதபுரம் அரண்மனை ஜமீன்கள், அவர்கள் வாரிசுகள், தேவஸ்தான சமஸ்தான அலுவலர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.