பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுக்கடைகளை அகற்றக்கோரி சிஐடியு சார்பில் போராட்டம்!
1041 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள அரசு மதுபான கடையை அகற்றவும், பாம்பன் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றவும் வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட சிஐடி தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர், பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் அரசு அலுவலகங்கள் இயங்கக்கூடிய பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும், இதில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கையூட்டுப் பெற்றுக் கொண்டு இப்பகுதியில் அரசு மதுபான கடை நடத்துவதற்கு உதவி செய்து வருவதாகவும் இரண்டு கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என சி ஐ டி தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர், இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்