ஆங்கில வழிக்கல்வி முறை அரசுப் பள்ளிகளில் பயில மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
1025 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் நகராட்சி அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு முடித்து, 11-ம் வகுப்பிற்கு செல்லும் தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி முறை அரசுப் பள்ளிகளில் பயில மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மேற்படிப்பிற்கு உதவ வேண்டி மாணவிகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் இராமநாதபுரத்தில் வள்ளல்பாரி தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எங்களது குழந்தைகள் கடந்த 2012 முதல் ஆங்கில வழிக்கல்வி கற்று வந்தனர். தற்போது 2022-23-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு முடித்து இருக்கும் நிலையில் 11-ம் வகுப்பிற்கு ஆங்கில வழிக்கல்வி முறை அரசுப் பள்ளிகளில் மற்றும் நகராட்சிப் பள்ளியில் இல்லாத காரணத்தால் படிப்பை தொடர்வதில் 46 மாணவிகளின் எதிர்காலப் படிப்பிற்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை சரிசெய்யும் விதமாகவும், மாணவிகளின் கல்வியை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகமும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் முயற்சித்து மாணவிகளின் மேற்படிப்பிற்கு உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். மேலும் 46 மாணவிகள் மற்றும் எதிர்கால மாணவிகளின் கல்வியைக் கருத்தில் கொண்டு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம், தற்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 11ம் வகுப்பு ஆங்கில வழி படிப்பு தொடர்வதற்கு உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டி பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் மாணவிகளுடன் மனு அளித்தனர்.மாணவி பேட்டி உள்ளது.