முப்பெரும் விழா குறித்த ஓபிஎஸ் அதிமுக அணியின் ஆலோசனை கூட்டம்
1106 views
Subscribe ராமநாதபுரம் videosதமிழக அளவில் திருச்சியில் வரும் 24ஆம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது குறித்த ஓபிஎஸ் அதிமுக அணியின் ஆலோசனை கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது. இராமநாதபுரம் ஏப். 18.ராமநாதபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், பாரதி நகர் அருகே தனியார் மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமை வகித்து நிர்வாகிகளிடம் பேசுகையில்தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களால் முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்டவர் ஓ பன்னீர்செல்வம் இரண்டு முறை முதலமைச்சராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர், ஜெயலலிதாவால் பாராட்டு பெற்று நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் அவரின் பின்னால் அணிவகுத்து நிற்பதில் பெருமை அடைகிறோம்அதிமுகவிற்கு சோதனை வரும் போதெல்லாம் தொண்டர்கள் சோர்வடையாமல் தேர்தலில் களப்பணி ஆற்றியவர்கள் அதிமுகவினர், தற்போது எடப்பாடி அணியினர் அதிமுக தொண்டர்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள், வரும் 24ஆம் தேதி திருச்சியில் ஓபிஎஸ் அணியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது, இதில் சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னமும் பொதுச்செயலாளர் பதவியும் ஓபிஎஸ் வசம் வந்துவிடும், அதன் பின்பு தேர்தலை சந்திப்போம், திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழா திருப்புமுனை மாநாடாக அமைய உள்ளது, உலகமே உற்றுநோக்கும் அரசியல் மாற்றத்திற்கான மாநாடாக நடைபெற உள்ளது என ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும் எம்பியுமான ஆர்.தர்மர் தெரிவித்தார். இதில் ராமநாதபுரம் ஒன்றிய கழகச் செயலாளர்கள், முத்து முருகன் , கோட்டைச்சாமி, ராமநாதபுரம் நகர் கழகச் செயலாளர்கள், பாலசுப்பிரமணியன்,டி.ஆர்.சீனிவாசன், பரமக்குடி நகர கழகச் செயலாளர் வின்சென்ட் ராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.