வெடிகுண்டு புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் அதிகாரிகள் சோதனை!
1045 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை அடுத்த மடத்தை அக்காள் மடம் வடக்கு கடற்கரை பகுதியில் மண்ணுக்குள் வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டு இருப்பதாக மதுரை வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது, இந்த தகவலின் பெயரில் அக்கால் மடம் வடக்கு கடற்கரை பகுதிகள் முழுவதும் இன்று காலை முதலே வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள், க்யூ பிரிவு அதிகாரிகள், மரைன் போலீசார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்,மேலும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மன்னுக்கு அடியில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் இதனால் சோதனையின் போது பேராபத்துகள் வராமல் இருப்பதற்காக அதனை தவிர்ப்பதற்காக வெடிகுண்டு சோதனையிடும் கருவிகள் தற்போது வரவழைக்கப்பட்டிருக்கிறது, அவற்றின் உதவியுடன் தொடர்ந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தங்கச்சிமடம் பகுதியில் அதிகமான வெடிகுண்டு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களால் அது செயலிழக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.