கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
1034 views
Subscribe ராமநாதபுரம் videosராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வேலங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அரியநாச்சி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது இதில் ராமநாதபுரம் மதுரை திண்டுக்கல் தேனி விருதுநகர் சிவகங்கை புதுக்கோட்டை திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் 120 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசு சில்வர் அண்டா குத்துவிளக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டன இந்த போட்டியை கமுதி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தன போட்டிக்கான ஏற்பாடுகளை வேலாங்குளம் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.