மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்!
1021 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் 2017 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இலங்கை அரசால் பிடிபட்ட படகுகளுக்கு இழப்பீடு வழங்கியதில் 25க்கும் மேற்பட்ட படகுகளுக்கு இழப்பீடு தொகை விடுபட்டது, விடுபட்ட படகுகளை உடனடியாக இழப்பீடு தொகை வழங்க கோரியும்,கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ராமநாதபுரம் புதுக்கோட்டை நாகப்பட்டினம் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படை கைது செய்து அரசுடமையாக்கப்பட்டது,மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து நல்ல நிலையில் உள்ள படகுகளை மீட்டு தரக்கோரியும், இலங்கை கடற்பரப்பில் மூழ்கி சேதமடைந்த விசைப்படகுகளுக்கு மற்றும் நாட்டுப் படகுகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க கோரியும்.மத்திய மாநில அரசுகளை தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் இலங்கை அரசுக்கு துணை போவது ஏன் என்றும்அரசுக்கு ரூ 70000 கோடி அந்நிய செலவாணியை ஈட்டிக் கொடுக்கும் தமிழக மீனவர்களை கண்டுகொள்ளாதது ஏன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மீனவர் கூட்டமைப்பு சார்பில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.