பச்சை நிறப் பட்டு உடுத்தி பூப்பல்லக்கில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்!
1078 views
Subscribe ராமநாதபுரம் videosராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.இதன் முக்கிய நிகழ்ச்சியாக பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது.இதனையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் பச்சை நிறப் பட்டுத்தி கள்ளழகர் வேடமணிந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டார்.வாணவேடிக்கைகள் முழங்க ஏராளமான தீவட்டி வெளிச்சத்தில் அதிகாலை 4.30 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தராஜ், கோவிந்தா என கோஷமிட்டு கள்ளழகரை தரிசித்தனர்.வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் பின்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மண்டகப்படிகளுக்கு சென்றார்.மேலும் கள்ளழகர் பச்சை நிற பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கியதால் நாடு பஞ்சம் இல்லாமல் விவசாயம் செழிக்கும் என ஐதீகமாக கருதப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.