தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார்!
1069 views
Subscribe ராமநாதபுரம் videosஇராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, பொதுமக்கள் மஞ்சப்பைகளை கட்டணம் செலுத்தி பெறுவதற்கான தானியங்கி இயந்திரத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்து தெரிவிக்கையில்,தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து 01.01.2019 முதல் அமலில் உள்ளது. வருங்கால சந்ததியின் நலனுக்காக, பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கவும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்;தை மீண்டும் கொண்டு வரவும், தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.அதனை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் டிசம்பர் 23, 2021 அன்று “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்கள். மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மீண்டும் மஞ்சப்பை விழ்ப்புணர்வு பிரச்சாரத்ததை தொடந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இராமநாதபுரம் மாவட்டம் இணைந்து பொதுமக்கள் மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நான்கு மஞ்சப்பை தானியங்கி இயந்திரங்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் மாவட்ட வன அலுவலர் அவர்களுக்கு வழங்கப்பட்டு, ஒரு மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மஞ்சப்பை தானியங்கி இயந்திரங்கள் இராமேஸ்வரத்திலும் ஒரு இயந்திரம் ஏர்வாடி தர்காவிலும் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தில் பத்து ரூபாய் நாணயங்களாகவோ அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது ஐந்து 2 ரூபாய் நாணயங்களாகவோ அல்லது பத்து 1 ரூபாய் நாணயங்களாகவோ செலுத்தி பொதுமக்கள் மஞ்சப்பை பெற்றக்கொள்ளலாம். இந்த இயந்திரம் 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஸ் சுதாகர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராசன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அனந்த நாராயணன், உதவி பொறியாளர் ஜீசஸ் சிவசங்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.